உப்பாறு மற்றும் ஆழியாறு ஆறுகளில் மலக்கழிவுகள் கலப்பதை தடுக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் மற்றும் ஒடையகுளம் ஆகிய 3 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் உப்பாற்றிலும் அதில் இருந்து ஆழியாறு ஆற்றிலும் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீண்ட காலமாக இருந்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும், ஆறுகள் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு இத்திட்டம் கிடப்பிற்கு போனதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் பரமசிவம் கூறுகையில், உப்பாறு ஆனைமலையில் ஆழியாறு ஆற்றுடன் கலக்கிறது. 3 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் இந்து கழிவு நீர் உப்பாற்றிலேயே வெளியேற்றப்படுகிறது.

இந்த ஆற்றின் கரையில் பல இடங்களில் மயானங்கள் உள்ளன. அங்கு புதைக்கப்படும் உடல்கள் மழைக்காலங்களில் ஆற்றில் கலக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும் மயானங்களில் இருந்து அனைத்து கழிவுகளும் இந்த ஆற்றில்தான் கலக்கிறது. அதே ஆற்றில் இருந்து மூன்று பேரூராட்சிகளுக்கு குடிநீரும் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பொள்ளாச்சி நகரம், வழியோர கிராமங்கள், குனியமுத்தூர் என பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கும் இந்த ஆற்றில் இருந்துதான் குடிநீர் எடுக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண உப்பாறு ஆழியாறு ஆற்றில் கலக்கும் இடம், மாசாணியம்மன் கோவில் பின்புறம் உள்ளிட்ட 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலைங்கள் அமைப்பது என முடிவெடுத்தனர். ஆனால் குடிநரீ வடிகால் வாரியத்தினர் இதில் போதிய ஆர்வம் காட்டாததால் ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பணியினை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ரூ. 3 கோடியே 20 லட்சம் செலவு பிடிக்கும் என விரிவான அறிக்கை தயார் செய்ததோடு இத்திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கழிவு நீர் கலந்து இரு ஆறுகளும் மாசுபட்டு வரும் நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]
- மதுரை மல்லிகையின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்..,
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இயக்கம்..!மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் […] - படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, […]
- கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலைதென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு […]