மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சாலையை கடக்க முயன்ற குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பிரகலாதன் என்ற 1 வயது சிறுவன் உள்பட, ஜோதிகா, லட்சுமி, பாண்டிச்செல்வி என்ற 4 பலியானார்கள். மேலும் கவியாழினி என்ற ஒரு வயது சிறுமி, ஜெயபாண்டி, கருப்பாயி என்ற 3 பேர், படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.