• Fri. Mar 29th, 2024

செப் 7-ந்தேதி ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி

ByA.Tamilselvan

Aug 22, 2022

பாதயாத்திரை செல்ல திட்ட மிட்டுள்ள ராகுல்காந்தி அதற்கு முன்னதாக தனது தந்தை ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகிற செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரை தொடங்குகிறது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு சென்று ராகுல்காந்தி அஞ்சலி செலுத்த உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை கூறும் போது, ராகுல் காந்தி செப்டம்பர் 7-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு செல்கிறார். கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்குவதற்கு முன்பு ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானம் செய்து அஞ்சலி செலுத்த உள்ளார் என்றார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு ராகுல்காந்தி முதல் முறையாக வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *