அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கிவருவது சிறிதும் அறமற்ற செயலாகும். நாட்டின் வருங்கால தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்களிடையே நிலவும் ஊதியப் பாகுபாட்டை களைந்து உடனடியாக அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிடவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.