திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் பகுதியில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பத்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இங்கு முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனால் முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் திருமண வைபங்கள் களை கட்டும். இதன் காரணமாக கோயில் பிரதான சாலையான சன்னதி தெரு பக்தர்கள் மற்றும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும். மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அப்படி வரும் பெரும்பாலான பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு, கிரிவலம் செல்வதுமுண்டு. மலைக்கு பின்புறம் மலையடிவாரப் பகுதியில் தென்பரங்குன்றம் என்னும் அழகிய ஊர் அமைந்துள்ளது. இப்பகுதியில் பரந்து விரிந்த கண்மாய்கள், வயல் நிலங்கள், ரோட்டோரம் கம்பீரமாக நிற்கும் பழமையான மரங்கள் நம்மை வரவேற்கும். அந்தளவிற்கு இந்தப் பகுதியில் எப்போதும் ரம்மியமான சூழ்நிலை நிலவும். இந்தப் பகுதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இங்குள்ள கல்வெட்டு குகைக் கோயில், கன்னிமார் கோயில் மற்றும் பால் சுவை கண்ட சிவபெருமான் கோயில் உள்ளது. கோயிலுக்கு வரும் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் இந்த கல்வெட்டு குகைக் கோவிலுக்கு வந்து அதன் அழகையும், அங்கு கல்வெட்டால் செதுக்கிய சிற்பங்களை கண்டு மெய்சிலிர்த்து செல்வதுண்டு. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்வெட்டு குகைக் கோயிலை சுற்றி ஏராளமான வண்ண மயில்களும், அதிசய வெள்ளை மயில்களும் முன்பு அதிக அளவு காணப்பட்டது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மயிலின் அழகை பார்த்து பரவசமடைவர். சிலர் காலை மற்றும் மாலையில் அதற்கு பிடித்தமான தானியங்களை உணவாக தூவி செல்வர். ஒரு சில பக்தர்கள் மயிலை முருகா முருகா என்று சத்தம் போட்டு அழைக்க மலைக் குன்றுகளில் இருந்தும், மரங்களின் மீதிருந்தும் கூட்டம், கூட்டமாக பறந்து வரும் அழகே தனி. இதுவும் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதேபோல் மயில்களின் இனப்பெருக்க காலம் முடிந்து, அதன் குஞ்சுகளுடன் ஒய்யாரமாக நடந்து வரும். இவற்றிற்கு மத்தியில் ஆச்சர்யமூட்டும் வகையில் திடீரென வெள்ளை மயில்களும் உலா வரும். இந்த அதிசய மயில்கள் சொற்ப அளவில் காணப்பட்டது. சில நேரங்களில் அவைகள் ஆனந்தமாக தோகை விரித்தாடும் அழகை கண்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உணவு மற்றும் தண்ணீர் அப்பகுதியில் போதுமான அளவு கிடைத்து வந்ததால் மயிலையும் அதிகளவு நம்மால் காண முடிந்தது. கிரிவலப் பாதை அருகேயுள்ள திருமறையூர் கிராமத்தில் பரந்து விரிந்த கண்மாய்
உள்ளது. இக் கண்மாய் ஒருமுறை நிரம்பினால் இரண்டாண்டுகள் வரை தண்ணீர் தேங்கி நிற்கும். அதேபோல் கண்மாயை சுற்றி பச்சை பசேலென நெற்பயிர்கள் பல ஏக்கரில் விளைந்து நிற்கும். இதனால், மயில்கள் மற்றும் குரங்குகளுக்கு தேவையான உணவு தடையின்றி கிடைத்து வந்தது. அவைகள் சந்தோஷமாக சுற்றித் திரிந்தன. காலப்போக்கில் ‘விளை நிலங்கள் எல்லாம் விலை நிலமாக’ மாறிவிட்டது. கண்மாய் சுருங்கியதால், தண்ணீர் பற்றாக்குறை இது போன்ற பல காரணங்களால் மயில்களுக்கு நாளுக்கு நாள் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மயிர்களின் எண்ணிக்கை குறைய துவங்கி, தற்போது விரல் விட்டு என்னும் வகையில் தான் மயில்கள் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் வேதனையடைந்து வருகின்றனர். எனவே, கோயில் நிர்வாகம் இருக்கும் மயில்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]
- குறள் 215:ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், […]
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]