• Mon. Mar 27th, 2023

சங்கீத கலாசிகாமணி எஸ்.பாலச்சந்தர் பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Jan 18, 2022

ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர் எஸ்.பாலச்சந்தர். பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார்.

இவர்களது பூர்வீகம் நன்னிலம் வட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் கிராமம். தந்தை சுந்தரம் ஐயர் சென்னைக்கு வந்து சட்டப் படிப்பை முடித்த பின்னர் மைலாப்பூரில் வக்கீலாகத் தொழில் பார்த்து அங்கேயே குடியேறி விட்டார். பாலச்சந்தரின் அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜெயலட்சுமி சிவகவி என்ற திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் உடன் நடித்துள்ளார்.

சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார்.

தான் இயக்கிய திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார். 1934ஆம் ஆண்டில் பிரபாத் கம்பனியின் சீதா கல்யாணம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடசத்திரமாக அறிமுகமானார்.

திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருதும், சங்கீத கலாசிகாமணி விருதும் கிடைத்தது.கரைப்புரண்டோடும் சங்கீதத்தில் கல்லாய் நின்று சாதித்த எஸ்.பாலச்சந்தர் பிறந்த தினம் இன்று..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *