

தேவையானவை:
வரகரிசி – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வரகரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாயை பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து… புளிக் கரைசலை விடவும். இதனுடன் உப்பு, தனியா – மிளகாய் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியில் வேகவைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி இறக்கவும்
