தென்னிந்திய திரைப்படங்கள் ரூ500கோடியை தாண்டிவசூலில் சாதனை படைத்து வருகின்றன .இந்நிலையில் சமீபத்தில் சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.
ஒருகாலத்தில் 100 நாட்கள் படம் ஓடினால்தான் சாதனையாக பார்க்கப்பட்டது. தற்போது குறைந்த நாட்களில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன தென்னிந்திய திரைப்படங்கள். ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையை விட பாக்ஸ் ஆபீஸில் செய்த வசூலே படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை வசூல் செய்தாலே பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடி வசூல் என்பது சிறியதாகிவிட்டது.
அண்மை காலமாக வெளிவரும் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படங்கள் பல ரூ. 500 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. பாகுபலி படத்தில் துவங்கிய இந்த மைக்கல் சாதனை தற்போது பொன்னியின் செல்வன் வரை சென்றுகொண்டிருக்கிறது.இந்நிலையில், தென்னிந்திய அளவில் ரூ. 500 கோடியை கடந்து வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.இதோ அந்த லிஸ்ட்..
பாகுபலி 1, 2.0, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எப் 2 , பொன்னியின் செல்வன்