• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே தச்சர் வீட்டில் கொள்ளை..,

ByS.Ariyanayagam

Nov 6, 2025

திண்டுக்கல்லில் தச்சர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பாறைப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன். இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு 2 சிறுவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.