• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ராம்கி என்னிடம் ‘லவ் யூ; கூட சொன்னதில்லை – நிரோஷா!

நடிகை நிரோஷா தனது காதல் கணவர் ராம்கி இதுவரை தன்னிடம் “லவ் யூ” என சொன்னதே இல்லை என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் நிரோஷா. அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் 1995ம் ஆண்டு நடிகர் ராம்கி திருமணம் செய்து கொண்டார். நடிகை நிரோஷா தனக்கும் தனது கணவருக்கும் இடையிலான தொடக்க கால காதல் கதை பற்றி தற்போது பகிர்ந்துள்ளார்.

தொடக்கத்திலிருந்தே எனக்கும் அவருக்கும் இடையில் மோதல் போக்கு மட்டுமே இருந்ததாகவும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்போம் என்று கூறினார். மேலும் படத்தில் நடிக்கும் போது, அவர் என்னைத் தொடும் போது அனுமதி கேட்க மாட்டீங்களா? கமல் சார் கூட நடித்திருக்கிறேன். அவர் கூட தொடுவதற்கு முன் அனுமதி கேட்பார். நீங்க யாருங்க? என நடிகர் ராம்கியிடம் கேட்டு உள்ளேன். அப்போது எல்லாம் எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. அதனை தொடர்ந்து நாங்கள் நல்ல ஒரு நண்பர்களாக மாறினோம். தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியது பற்றி பேசிய நிரோஷா, நான் இதுவரை ராம்கியிடம் “லவ் யூ” என்று சொன்னதே இல்லை. அவரும் என்னிடம் சொன்னதுமில்லை, ஆனால் ஏன் என தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் தனது காதலுக்கு குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சினிமா துறையை சேர்ந்தவர்களை காதலிக்கக் கூடாது என்பதில் உறுதியாகவும் கண்டிப்பாக இருந்ததாகவும் கூறினார். இதனை அடுத்து நான் நடிக்க விரும்பவில்லை. அப்போது மணிரத்னம் சார் திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்த நிலையில், என் அக்கா ராதிகா என்னை படத்தில் நடிக்க அனுமதித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் அண்ணனோ அல்லது அம்மாவோ என்னுடன் வருவார்கள்.

அதனால் என்னால் ராம்கியிடம் பேச முடியாது. மேலும் நான் ராம்கியிடம் போனில் பேசி, வீட்டில் நிறைய அடி வாங்கி இருக்கிறேன். இதனையடுத்து என் அக்கா ராதிகா, நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார். ஆனால், அப்போது சினிமாவில் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்த ஜோடியாக நாங்கள் இருவரும் அறியப்பட்டு இருந்தோம். மேலும் இணைந்த கைகள் என்ற படத்தில் ராம்கிக்கு நான் தான் ஜோடியாக நடிக்க வேண்டிய நிலையில், படத்தின் பூஜை முடிந்தவுடன் என் அக்கா ராதிகா இந்த படத்தில் நடிக்க கூடாது என்று தடை விதித்தார். அதனைத் தொடர்ந்து அருண் பாண்டியனுக்கு, என்னை ஜோடியாக மாற்றினார்கள் என்று நிரோஷா கூறியுள்ளார்.