விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், ரமண மகரிஷி ஜெயந்தி விழா அவருடைய பிறந்த இல்லத்தில் நடந்தது. திருச்சுழியில் உள்ள சுந்தர மந்திரம் இல்லத்தில், ரமண மகரிஷி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த வீட்டில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், புனர்பூசம் நட்சத்திரம்
தினத்தில், அவரது இல்லத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புயாக பூஜைகள் நடந்தது.
அதைத் தொடர்ந்து, ரமண மகரிஷிக்கு சிறப்பு பூஜை கள் நடந்தது. தீபாரா தனை காட்டப்பட்டது. ரமண மகரிஷி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது.