மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கவும், மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கவும் வலியுறுத்தி மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க உழவர் பேரணி மற்றும் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.

மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசன முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க உழவர் பேரணி மற்றும் விளக்கக் கூட்டம் சங்கத் தலைவர் குருகோபிகணேசன் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்து ஜீரோ சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அறிவிக்கப்பட்டுள்ள 74 கிராமங்களையும் மறுஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.8000 தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும், பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பாண்டிச்சேரி, தெலுங்கானா, சட்டீஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்குவது போல் பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் டெண்டர் பேக்கேஜ் முறையில் தூர்வாரும் பணிகளை செய்வதற்கு உண்மையான விவசாய குழுக்கள் ஏற்படுத்த வேண்டும், நெல்லுக்கு மாற்றுத் தொழிலாக விளங்கக்கூடிய கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள தலைஞாயிறு என்.பி.கே.ஆர் சர்க்கரை ஆலையை போர்க்கால அடிப்படையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அறுவடைக் காலம் துவங்குவதற்கு முன்பே அறுவடை இயந்திரங்கள் அதற்கான வாடகை கூலியை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
திருவாரூர் சாலை கேணிக்கடையில் துவங்கிய பேரணியானது சின்னக்கடை வீதியில் நிறைவடைந்தது. அங்கு கோரிக்கைகள் குறித்து விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினர். இதில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]