ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அவரது மருமகன் இணைந்துள்ளார்.ராகுல்காந்தி கடந்த செப்.7 ம் தேதி முதல் ஒற்றுமை இந்தியா நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பயணத்தை தொடங்கிய அவர் கேரளா,ஆந்திரா, கர்நாடகா,தெலுங்கானா,மகாராஷ்டிராவில் பயணத்தை முடித்து தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை ராகுலுடன் பிரியங்காவும், அவரது மகன் ரைஹான் வதோராவும் இணைந்தனர். அப்போது ராகுல் ரைஹானுடன் உற்சாகமாக நடைபயணம் மேற்கொண்டார்.