பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து குஜராத் நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உத்தரவிட்டார்.
இதையடுத்து அவருக்கு மாவட்ட தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சூரத் நீதிபதி உள்பட குஜராத்தில் 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது, மேலும், பழைய பதவியிலேயே நீதிபதிகள் தொடர வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.