• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மக்கள் எதிர்ப்பு..,

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சனிக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு “50501” என்று பெயரிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 50 போராட்டங்கள், ஒரே குறிக்கோளுடன் நடத்தப்படுவதை இது குறிக்கிறது.

இந்த போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்றன. டிரம்ப் நிர்வாகத்தின் மக்கள் வெளியேற்ற கொள்கை மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக முக்கியமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதிக வரி விதிக்கும் டிரம்ப்பின் கொள்கைகளும் போராட்டத்திற்கு காரணமாயின.

முன்னதாக ராய்ட்டர்ஸ் இப்சோஸ் நடத்திய ஆய்வில் டிரம்ப்பின் மக்கள் ஆதரவு குறைந்து வருவதாக அறிக்கைகள் வெளியாயின. அவரது ஆதரவு 47 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாக குறைந்தது. அவரது பொருளாதார கொள்கைகளை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை 42 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக குறைந்தது.
வெள்ளை மாளிகைக்கு முன்பிருந்து டெஸ்லா டீலர்ஷிப்களுக்கு முன்பும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க புரட்சியின் 250வது ஆண்டு நிறைவு நாளில் இந்த போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. டோஜ் உள்ளிட்ட ஏஜென்சிகளின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.