• Thu. May 15th, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்..,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கன்வாடி மையத்திற்கு கோடை விடுமுறை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பப்பட வேண்டும் ,பொறுப்பு பணி பார்க்கும் பணியாளர்களுக்கு ஐயாயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.