ராஜபாளையம் அருகே சேத்தூரில் நியாய விலைக் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மக்கள் எதிர்ப்பை மீறி மற்றொரு பேரூராட்சி சார்பில் கழிவறை கட்டுவதாக கூறி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியின் 16 வது வார்டில் இது வரை நியாய விலைக் கடை கட்டப்படவில்லை. இப் பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் செயல்படும் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.எனவே அந்த வார்டில் உள்ள மலையடிவார புறம்போக்கு நிலத்தில் நியாய விலைக் கடை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சி சார்பில் கழிப்பறை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்த மக்கள் அந்த வார்டு கவுன்சிலர் கற்பம் மூலம் எழுத்து பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து சேத்தூர் பேரூராட்சி செயலர் அந்த இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் கட்டட பணிகள் நடந்துள்ளது.

இது குறித்து இன்று நடந்த பேரூராட்சி கூட்டத்தில் 16 வது வார்டு கவுன்சிலர் கற்பகம், பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் செயல் அலுவலர் வெங்கட கோபுவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது இவருக்கு ஆதரவாக 7 மற்றும் 8 வது வார்டை சேர்ந்த அதிமுக கவுன்சிலர்களும் பேசினர். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது. கேள்விக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி கற்பகமும், தங்களை பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்வதாக கூறி இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் என 3 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.இதனை அடுத்து 16 வது வார்டு பொது மக்களை திரட்டிய கவுன்சிலர் கற்பகம் பேரூராட்சி நிர்வாகத்தையும், தலைவர் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்தும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது நிர்வாகம் தங்களை அலட்சியப்படுத்துவதாகவும், தங்களது பகுதியில் குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் பொது மக்கள் முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச வந்த பேரூராட்சி தலைவரிடம் பொது மக்கள் பேச மறுத்து விட்டனர்.தகவல் அறிந்து வந்த துணை வட்டாட்சியர் கோதண்டராமன் பொது மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு, அங்கு நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கட்டட பணிகளை தற்காலிகமாக நிறுத்தினர்.
- பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்நடிகர் கௌதம் கார்த்திக் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் பத்துதல என்கிறார் ‘பத்து தல’ […]
- அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ டீசர் வெளியானதுநடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘மைதான்’ இருக்கிறது. உலக அளவில் பலராலும் […]
- மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் -உதவிசெயற்பொறியாளர் கைதுமதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் […]
- பிரபாஸ் நடிக்கும்ஆதிபுருஷ் போஸ்டர் வெளியீடு சர்ச்சையை ஏற்படுத்துமா?சினிமாவில் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும்படங்களில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் இடம்பெற்றுள்ளது.இந்த திரைப்படம் 2023ஜூன்மாதம் 16ஆம் […]
- மதுரை காமராஜர் பல்கலை. விடுதி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலிமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி […]
- நகை திருட்டு புகார் மனுவை மாற்றியஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை காணாமல்போனது சம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுத்தது பல்வேறு […]
- தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்தவமனைகளில் மாஸ்க் கட்டாயம் […]
- பத்துதல- திரைவிமர்சனம்வேற்று மொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் தயாரிப்பது அதுவும் வியாபாரம் உள்ள நடிகர்களை நடிக்க வைத்து […]
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]