• Fri. Mar 29th, 2024

தொடர் உச்சத்தில் காய்கறிகளின் விலை.. கவலையில் மக்கள்

Byமதி

Dec 7, 2021

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தக்காளிக்கு என்று தனி மைதானம் துவங்கப்பட்டு 7 நாட்கள் ஆனா நிலையில் விலை குறையாததால் மக்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது தொடர் மழையால் தக்காளி மட்டுமில்லாமல் இதர காய்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

அதன்படி சென்னையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.

அத்தியாவசிய காய்கறிகளான கத்திரிக்காய் 1 கிலோ 80, நாட்டுத் தக்காளி கிலோ 90 க்கும், வெங்காயம் 36 ,வெண்டைக்காய் 70 க்கும், கேரட் 70 க்கும், அவரைக்காய் 80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கீரை வகைகள் முற்றிலும் வரத்து குறைவால் ஒரு கட்டு 35 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து காய்களும் கிலோ ரூ.50 மேல் மட்டுமே விற்பனை செய்யப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *