• Sun. Jul 5th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு..,

ByRadhakrishnan Thangaraj

Apr 25, 2025

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிதம்பரேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதே போல சொக்கர் கோவில், மாயூரநாதசுவாமி கோவில், ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரர் கோவில், உள்பட பல்வேறு சிவன் கோவில்களில்
பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.