• Fri. Mar 29th, 2024

வசூல் சாதனை படைக்கும் பொன்னியின்செல்வன்…

ByA.Tamilselvan

Oct 5, 2022

அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் என்ற நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கியுள்ளார்.
திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் ,பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி ,வந்திய தேவனாக கார்த்தி, பழுவூர் ராணியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிசா ,உள்ளிட்ட திரை பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ரூ100கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ300கோடியை தாண்டி வசூலித்துள்ளது. அதே போல் ஆந்திராவில் ரூ19கோடி ,கர்நாடகாவில்ரூ17 கோடி ,கேரளாவில் 18கோடி யும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. தமிழகத்தில் வலிமை, பீட்ஸ்,கேஜிஎஃப் 2, விக்ரம் வரிசையில் இப்படமும் ரூ100கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *