• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

போலீசார் கைப்பற்றிய கஞ்சா.. அழிப்பு..,

ByS.Ariyanayagam

May 27, 2026

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் கைப்பற்றிய கஞ்சா அழிக்கப்பட்டது.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 825.411கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 42 வழக்குகளில் 177.326 கிலோ கிராம் கஞ்சாவும், அதேபோல் தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதில் 118 வழக்குகளில் 648.085 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
இன்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 825.411 கிலோ கிராம் கஞ்சாவினை அரசு வழிகாட்டு விதிகளின் படி திண்டுக்கல் சரக அளவிலான போதைப் பொருள் அழிக்கப்பட்டது.