ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி பல்வேறுநாட்டு உலகத்தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்தோனேசிய தலைநகர் பாலியில் ஜி.20 மாநாடு நடைபெறுகிறது.இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவருடன் கைகுழுக்கி ஆரத்தழுவினார். அவரை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மேக்ரோனும் மோடியை சந்தித்து கைகுழுக்கினார்.