பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் இரா. தேன்மொழி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான க.கற்பகத்திடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியின் போது கட்சியின மாவட்ட செயலாளர் தங்க ரத்தினவேல், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.