• Thu. Jun 8th, 2023

ஒரு வாக்கு கூட வாங்காத கட்சிகள்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், மற்றும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சியின் 15வது வார்டில் ஒரு வாக்குக்கூட பெறாமல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியின் 3வது வார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *