

முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனுக்கு பங்குனித் திருவிழா தொடங்கியது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேங்காய் தோடும் முகூர்த்தமும். தேர் முகூர்த்தம் நடைபெற்றது. தேர் டச்சு செய்யப்பட்டது.


கருப்பண்ணசாமிக்கு தீவாராதனை நடைபெற்றது. மார்ச் 5 ஆம் தேதி கொடியேற்றமும் மார்ச் 16 ஆம் தேதி சூரசம்காரமும், மார்ச் 17 பட்ட அபிஷேகமும், மார்ச் 18 திருக்கல்யாணமும், மார்ச் 19 தேரோட்டமும் நிகழ்ச்சி மார்ச் 20 தீர்த்தவாரி உற்சவ விழாவும் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

