• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சி.ஆர்.பி.எஃப் வீரரை மணந்த பாகிஸ்தான் பெண்..,

ஜம்முவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரை மணந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மினல் கான் என்பவருக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், கடைசி நேரத்தில் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட இருந்த அவருக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

கரோட்டை கிராமத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் முனிர் கான் இரண்டரை மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தனது உறவினரான மினல் கானை திருமணம் செய்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகத்தின் ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற உத்தரவு இருவரின் வாழ்க்கையிலும் கவலைகளை ஏற்படுத்தியது. தன்னை முனிரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்று மினல் ஏற்கனவே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்காக செவ்வாய்க்கிழமை மினல் கான், அட்டாரி எல்லைக்கு அனுப்பப்பட்டார். புதன்கிழமை நீதிமன்றம் மினல் கான் தனது நீண்ட கால விசா விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கப்படும் வரை அவரை நாடு கடத்த
தற்காலிக தடை விதித்து தீர்ப்பளித்ததை அடுத்து, அவர் எல்லையில் இருந்து ஜம்முவில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு திரும்பியதாக அவரது வழக்கறிஞர் அங்குர் சர்மா தெரிவித்தார்.

மேலும் மினல் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார். உள்துறை அமைச்சகத்திற்கு சாதகமான பரிந்துரையும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அனுப்பப்பட்டார்,” என்று கூறிய சர்மா, “அவரது விசா விண்ணப்பத்தின் முடிவைப் பொறுத்தே நாடு கடத்தல் இருக்குமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்” என்றார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அரசாங்கம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஆறு நாட்களில் 55 தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்கள், துணை ஊழியர்கள் மற்றும் பாகிஸ்தான் விசா வைத்திருந்த எட்டு இந்தியர்கள் உட்பட 786 பாகிஸ்தான் நாட்டினர் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 24 முதல் பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்களில் 25 தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் உட்பட 1,465 இந்தியர்களும், நீண்ட கால இந்திய விசா வைத்திருந்த 151 பாகிஸ்தான் நாட்டினரும் அடங்குவர்.