• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சூர்யா சிறுத்தை சிவா இணையும் புதிய படம்

சிறுத்தை சிவா தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியையொட்டி ‘அண்ணாத்த’ வெளியாக உள்ளது. அதேசமயம், சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், இறுதிக்கட்டப்…

அமெரிக்காவிற்கு வெளிநாட்டினர் வர அனுமதி

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகிலேயே அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசியால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தற்போதைய அமெரிக்கா அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்கு முன் இந்தியா,…

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள்..!

குமரி மாவட்டம் காற்றாடி தட்டுப்பகுதியில் கை பேசி கோபுரம் அமைக்க அருகில் உள்ள பள்ளி நிர்வாகம் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு.ஆட்சியர் அரவிந்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காற்றாடித்தட்டுப்பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள…

பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு கடிதம் மூலம் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் கேட்டுக்கொண்டு இருந்தது. இதன் அடிப்படையில் நிலமற்ற விவசாயிகளுக்கு…

தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தரக் கோரி.. கர்ப்பிணி மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் இறங்கிய குடும்பம்..!

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஊர் பழையபள்ளி தெருவில் மன்னர் காலத்தில் இருந்து நான்கு தலைமுறையாக வசித்து வந்த குடும்பத்தினர் பிழைப்பு தேடி புலம்பெயர்ந்து சென்று திரும்பி வந்த போது, தங்களின் நிலத்தை குமரிமாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் அபகரித்து வைத்து தங்களுக்கு…

பஞ்சமி நிலங்களை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து, அவற்றை உரிய பட்டியல் இனத்தவருக்கு வழங்க வலியுறுத்தி, தலித் நில உரிமை இயக்கத்தின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரனிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்த தரிசு நிலங்களை கண்டறிந்து அவற்றை…

மீண்டும் பிரதமாரகிறாரர் ஜூன்ஸ்டின் ட்ருடோ

கனடா நாட்டில் 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை. ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி 155 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இதனால் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ நீடித்தார். இதற்கிடையே பெரும்பான்மை இல்லாமல்…

ராஜபாளையத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

பிரதமர் மோடி பிறந்த நாள் முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றியம் சார்பாக, அம்பேத்கார் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேற்கு மாவட்ட தலைவர் ராதா…

மத்திய அரசின் தனியார் மயமாக்க கொள்கைக்கு எதிர்ப்பு.. மதுரையில் ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை எதிர்த்து மதுரை ரயில் நிலையத்தில் SRES – NFIR தொழிற்சங்கத்தின் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்…

6 மாத குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கி, அமெரிக்காவிலுள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே பைசர் நிறுவனம் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட…