புத்தரின் சிந்தனைத் துளிகள்
• மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள்.
• பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள்.
• யாரையும் புறம் பேசாதீர்கள். பேச்சைக் குறைத்து மனதை நிலைப்படுத்துங்கள்.
• மனிதன் பெற வேண்டிய பெரிய பொக்கிஷம் அறிவு மட்டுமே. அழகு, செல்வம் இவை எல்லாம் நிலையற்றவை.
• விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.