சிந்தனைத்துளிகள்
நம்பிக்கைக்கும், தன்னம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு!!!
எது நம்மை உயர்த்தும்.?
கடைசிக் காலத்தில் என்னைப் பிள்ளை பார்த்துக் கொள்ளும் என்று நம்புவது நம்பிக்கை.
எனக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் என்னையும் மனைவியையும் நான் கடைசிக்காலத்தில் பார்த்துக் கொள்வேன் என்று நம்புவது தன்னம்பிக்கை.
நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை என்றுமே சிறந்தது. ஒருவனை உயர்த்துவதும் அதுதான்…
நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை…
மனம் உடையும் போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை…
தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை…
அது வேறு யார் கையும் அல்ல, உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை…
அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே…!