தோல்வி பட்ட உனக்கு
மட்டும் தானே தெரியும்
வெற்றியின் அருமை!
தன்னம்பிக்கை ஒன்றை
மட்டும் நினைவில் வைத்து
உன் வெற்றிக்காக வரிந்து கட்டு.
ஒரு விஷயத்தை
உன்னால் கனவு காண முடியுமானால்
அதனை உன்னால் செய்யவும் முடியும்.
வெற்றிக்கும்,தோல்விக்கும்
சிறிய வித்யாசம் தான்
உன் கடமையய் செய்தால் வெற்றி
கடமைக்கு செய்தால் தோல்வி.
சிக்கல்களை எதிர்கொள்ளு போது
கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
எந்த ஒரு செயலையும்
ஆர்வம் குறையாமல்
நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்
வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்.
நம்பிக்கை உள்ள மனிதனுக்கு
எப்போதும் ரோஜா மட்டும் தான்
கண்ணில் படும் முட்கள் இல்லை.