ஊக்கமூட்டும் மேற்கோள்கள்:
🏵️ கிடைக்காத வரை எது பெரிதாக தோன்றுகிறதோ.. அது கிடைத்ததும் அற்பமாக தோன்றும்.. இது தான் வாழ்க்கை.!
🏵️மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால்.. புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.!
🏵️மனநிறைவு அடைந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே.. கவலைகளை மனதில் சேமித்தால் வாழ்க்கை என்றும் துயரமே.!
🏵️கெட்டவர்கள் என்று எவரும் இல்லை.. நம் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.!
🏵️படுத்தே இருந்தால் படுக்கையும் நமக்கு பகையாகும்.. எழுந்து முயற்சி செய்தால் உலகமே நமதானது ஆகும்.!
🏵️மற்றவர்களை கீழே தள்ளி விடுவதினால் நாம் வலிமை அடைவதில்லை.. அவர்களை தூக்கி விடும் போது தான் நாம் வலிமை அடைகின்றோம்.!
🏵️உழைப்புக்கு பின் இரவில் ஓய்வு.. ஓய்வுக்கு பின் பகலில் உழைப்பு இதுவே வாழ்க்கையை செழிமை ஆக்கும்.
🏵️சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.!