• Tue. Apr 30th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 10, 2024

ஊக்கமூட்டும் மேற்கோள்கள்:

🏵️ கிடைக்காத வரை எது பெரிதாக தோன்றுகிறதோ.. அது கிடைத்ததும் அற்பமாக தோன்றும்.. இது தான் வாழ்க்கை.!

🏵️மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால்.. புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.!

🏵️மனநிறைவு அடைந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே.. கவலைகளை மனதில் சேமித்தால் வாழ்க்கை என்றும் துயரமே.!

🏵️கெட்டவர்கள் என்று எவரும் இல்லை.. நம் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.!

🏵️படுத்தே இருந்தால் படுக்கையும் நமக்கு பகையாகும்.. எழுந்து முயற்சி செய்தால் உலகமே நமதானது ஆகும்.!

🏵️மற்றவர்களை கீழே தள்ளி விடுவதினால் நாம் வலிமை அடைவதில்லை.. அவர்களை தூக்கி விடும் போது தான் நாம் வலிமை அடைகின்றோம்.!

🏵️உழைப்புக்கு பின் இரவில் ஓய்வு.. ஓய்வுக்கு பின் பகலில் உழைப்பு இதுவே வாழ்க்கையை செழிமை ஆக்கும்.

🏵️சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *