ராமநாதபுரம் அரண்மனைபகுதியில் பலாப்பழம் சின்னத்திற்காக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த ஜான்பாண்டியனை தேசிய ஜனநாயக கூட்டணியின் இராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பி ரவீந்திரநாத், கழகத் தொண்டர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் இருந்து பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.