• Sat. May 17th, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறப்பு

ByRadhakrishnan Thangaraj

Apr 28, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் மு. நாகராஜன், கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரையம்மாள், சரக ஆய்வாளர் செ.முத்து மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரொக்கப் பணம் ரூ. 11 லட்சத்து 23 ஆயிரத்து 797ம் தங்கம் 38 கிராம் மற்றும் வெள்ளி 276 கிராம் இருந்தது. எண்ணிக்கை பணியில் கோயில் அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.