• Fri. Mar 29th, 2024

ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே விடியல் கிடைத்துள்ளது.. கே.டி.ராஜேந்திரபாலாஜி கருத்து…

Byகாயத்ரி

Sep 20, 2022

திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே விடியல் கிடைத்துள்ளது, ஓட்டு போட்ட 8 கோடி மக்களும் தெருவில் நிற்கின்றனர் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு.

திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே விடியல் கிடைத்துள்ளது என்றும் ஓட்டு போட்ட 8 கோடி மக்களும் தெருவில் நிற்கின்றனர் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுனார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதி கழகம் சார்பாக அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் கூட்டணி கட்சி மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணாவின் பெயரை தனது இயக்கத்திற்கு வைத்து தமிழகமெங்கும் பட்டி, தொட்டியெல்லாம் அண்ணாவின் புகழைக் கொண்டு சென்றவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள். பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு செருப்பு, சீருடை கொடுத்து கல்வியில் புரட்சியை உருவாக்கியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். புரட்சித் தலைவருக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிக்கின்ற ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சைக்கிள் கொடுத்தார், லேப்டாப் கொடுத்தார், நோட்டு புத்தகம், சீருடை வழங்கினார். பஸ்பாஸ், கல்வி உதவித்தொகை வழங்கினார். உயர்கல்வியில் தமிழகத்தை முதன்மையாக மாநிலமாக மாற்றி காண்பித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித் தலைவி அவர்கள் மறைவிற்கு பிறகு இடைக்கால பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் படிக்கின்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகவும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தார். அது மட்டுமல்ல சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அரசு கலை கல்லூரியை கொண்டு வந்தார். விருதுநகரில் மெடிக்கல் கல்லூரியை கொண்டு வந்தார். கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை தீட்டினார். இப்படி உழைக்கின்ற கட்சியாக அண்ணா திமுக இருந்து இருக்கின்றது. ஆனால் திமுக இன்று என்ன செய்கின்றது. இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். விடியும் என்று நினைத்த மக்களுக்கு விடியாத ஆட்சியாக மாறிவிட்டது. நாட்டில் யாருமே சூவிட்சமாக இல்லை. ஓட்டு போட்ட மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. ஓட்டு கேட்ட திமுகவினரும் மகிழ்ச்சியாக இல்லை. திமுகவில் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிழைக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் சாலை ஓரத்தில் நான் கட்சிக்காரர்களுடன் டீ சாப்பிட்டபோது, குலாளார் சமூகத்தினர் வந்து என்னிடம் இந்த ஆட்சி மீது கோபத்தை வெளிப்படுத்தினர். அதிமுக ஆட்சியில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க இலவசமாக அனுமதி கொடுத்தீர்கள். ஆனால் இப்போது ஒரு லோடு மண்ணுக்கு 9ஆயிரம் பணம் கொடுத்து வாங்கி தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று வேதனையுடன் கூறினர். திமுகவிற்கு ஓட்டு போட்டதற்காக மண்ணைத்தான் திங்க வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளோம் என்று வேதனை தெரிவித்தனர். நாங்கள் ஓசியாக மண் அள்ள அனுமதி கொடுத்தோம். இப்போது ஒன்பதாயிரம் ரூபாய் கொடுத்து மண் எடுப்பதால் அதிமுக ஆட்சியில் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்த செங்கல் தற்போது 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வீடு கட்டும் செலவுகள் கூடிவிட்டது. அதிமுக ஆட்சியில் நூறு ரூபாய்க்கு கிடைத்த குவாட்டர் இன்று 140 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதிலும் போலியான சரக்குதான் கிடைக்கின்றது.

டாஸ்மாக் கடைகளில் போலியான சரக்கு விற்பனை செய்யப்படுகின்றது. டாஸ்மாக் கடைகளில் கரூர் சரக்குகள் தான் டூப்ளிகேட் ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த பொருளும் போலியாகவே உள்ளது. மின் கட்டணம் புதிய சர்வீஸ் வாங்க வேண்டும் என்றால் 5000 ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. ஐந்தாயிரம் கரண்ட் பில் கட்டினால் அடுத்த மாதம் 10 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். 50 ஆயிரம் மின் கட்டணம் செலுத்திய நூற்பாலைகள் அடுத்த மாதம் 90 ஆயிரம் கரண்ட் பில் கட்ட வேண்டி இருக்கும். கரண்ட் பில் கட்டாவிட்டால் 250 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். இல்லை என்றால் பீஸ் கட்டையை உருவி சென்று விடுகின்றனர். திமுக பதவி ஏற்ற பிறகு இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மண்ணெண்ணெய் வரவில்லை. மதுரையிலையே கடத்தி கொண்டு சென்றுவிடுகின்றனர். அடுத்து திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் கிடைத்ததை சுருட்ட வேண்டும் என்ற மனநிலைக்கு திமுகவினர் வந்துவிட்டனர். இந்த ஒன்றரை ஆண்டுகளில் விடியலை கொண்டு வருவோம் என்று கூறிய முதலமைச்சர், ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவரது வீட்டுக்கு முன்பு கருப்பு கொடி ஏந்தி மின்சார கட்டணத்தை நினைத்தால் எனது உடம்பிலே மின்சாரம் பாய்கின்றது என்று கூறினார். இப்போது மின்சார கட்டணத்தை பொறுத்துகொள்ளுங்கள் என்று கூறுகின்றார்.

அண்ணா திமுக ஆட்சியில் சொத்து வரியை கூட்டவில்லை, வீட்டு வரியை கூட்டவில்லை, கழிவுநீர் இணைப்பு வரியே கூட்டவில்லை, மின்சார கட்டணத்தை கூட்டவில்லை எந்த வரியும் கூட்ட வில்லை. எல்லா வரிகளையும் கூட்டிவிட்டு தமிழக முதல்வர் விளக்கம் வேற கூறுகின்றார். மக்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கசப்பாகத்தான் இருக்கிறது ஆனால் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்கின்றார். நீங்கள் மட்டும் லட்டு சாப்பிடலாம் நாங்கள் விஷத்தை சாப்பிட வேண்டுமா. இன்றைய திமுக ஆட்சியில் அவரது குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது. திமுக குடும்பத்திற்கு விடியல் வந்துள்ளது. ஓட்டு போட்ட எட்டு கோடி மக்களும் தெருவில் நிற்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் அண்ணா திமுக ஆட்சியில் எந்த குறையும் கிடையாது. அண்ணா திமுக ஆட்சி காலத்தில் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது எனது முயற்சியால் விருதுநகரில் மெடிக்கல் கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கட்டிய மெடிக்கல் கல்லூரியை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். நாங்கள் கட்டிய கட்டடத்தை எல்லாம் மீண்டும் வெள்ளை அடித்து சுண்ணாம்பு அடிச்சு கலர் கொடுத்து திறந்து வைக்கின்றனர். சென்னையில் ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்த பாலத்தை வெள்ளையடித்து கலர் கொடுத்து போன வாரம் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். ஏதோ அவர் கட்டி திறந்து வைத்தது போல் டிவியில் ஒளிபரப்பு செய்கின்றனர். அண்ணா திமுக ஆட்சியில் செய்த திட்டங்கள் சாதனைகள் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், டபிள்யூ புதுப்பட்டி, மம்சாபுரம் இந்த பகுதிகள் எல்லாம் அண்ணா திமுக ஆட்சியில் தான் அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து சாலைகளும் அதிமுக ஆட்சியில் தான் போடப்பட்டது. தண்ணீர் பிரச்சனை இல்லாத ஒரு நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை கொண்டு வந்தோம். கரண்ட் பில் கூடிவிடும் என்பதற்காக கரண்டை கட் பண்ணுகின்றனர். கரண்ட் பில் கூடினால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதால் கரண்டை கட் பண்ணுகின்றனர். கரண்ட் கட்டுக்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிதாக ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அணில்கள் செல்வதால் மின்தடை ஏற்படுகிறது என்று புதுக்கதையாக சொல்கின்றார். அதிமுக ஆட்சியிலும் அனில்கள் செல்லத்தான் செய்தது. கடந்த 10 ஆண்டுகளில் அண்ணா திமுக ஆட்சியில் மின்தடை என்பதே கிடையாது. தற்போது முதலமைச்சர் கட்டுப்பாட்டில் கவர்மெண்ட் கிடையாது.

அதிகாரிகள் ஒன்று செய்கின்றனர், அமைச்சர்கள் ஒன்று செய்கின்றனர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று செய்கின்றனர், திமுக நிர்வாகிகள் ஒன்று செய்கின்றனர். ரேஷன் கடையில் மாமூல் வசூலிக்கின்றனர். மக்காச்சோளத்தையும் கேழ்வரவையும் போட்ட ஆட்சி திமுக ஆட்சி. சோத்துக்கே கஷ்டத்தை உருவாக்குகின்ற ஆட்சி தான் திமுக ஆட்சி. கலைஞருடைய மகன் தான் ஸ்டாலின் என்ன நல்லது பண்ணி விடுவார் என்று மக்கள் ஓட்டு போட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆளும் திமுக கட்சியின் ஒரே நோக்கம் மணல் அடிக்க வேண்டும், மொத்தமாக சுருட்டி கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். வத்திராயிருப்பு பகுதியில் எல்லாம் கண்மாய் கரையையே சுருட்டி செல்கின்றனர். மண்ணைத் தூர் வாறுகின்றோம் என்று கூறி கண்மாய் கரையை எடுக்கின்றன. ஒன்று மட்டும் உண்மை விதைத்தது தான் முளைக்கும். விதைச்ச இடத்தில் தான் விதையை தேட வேண்டும். திமுகவினர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நாங்கள் ரெக்கார்ட் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். தகுநத ஆதாரங்களோடு ஐகோர்டில் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம்.. யார் யார் பேரில் லைசென்ஸ் உள்ளது யார் யார் பேரில் ரசீது போடுகின்றனர், எல்லா ரெக்கார்டையும் எடுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வோம். சட்டத்துக்கு உட்பட்டு மணல் எடுக்க வேண்டும். மணல் கொள்ளையை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம். அரசு அதிகாரிகள் விழிப்போடு இருக்க வேண்டும். உப்பைத் தின்றால் தண்ணி குடிச்சே ஆக வேண்டும். ஓட்டு போட்ட மக்களை தெருவில் விட்டு விட்டு இந்த ஆட்சி அலங்கோலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆயிரம் ரூபாய் வீட்டு தீர்வை கட்டியவர்கள் எல்லாம் இன்று 2000 ரூபாய் கட்ட வேண்டி உள்ளது.

வீட்டு வரி கூடியதால் வீட்டு வாடகையும் கூடிவிட்டது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சியை எதற்கு ஆரம்பித்தார் தெரியுமா, மிட்டா மிராசுதாரர்களுக்காகவோ, ஆலை அதிபர்களுக்காகவோ, அம்பானி, அதானி வகையார்களுக்காகவோ கிடையாது. ஒட்டிய வயிறோடு, கிழிந்த சட்டையோடு இருக்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகவே அண்ணா திமுகவை புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்தார். இந்த இயக்கம் இருக்கின்றவரை மக்களை பாதிக்கின்ற செயலை நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதிமுகவின் எக்கு கோட்டை. வத்திராயிருப்பு பகுதிக்கு ஒரு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்த அரசு எடப்பாடியார் அரசு. வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில்தான். நாங்கள் கட்டிய அந்த அலுவலகத்தை திமுகவிவினர் திறந்து வைத்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு எதிராக எப்போதுமே ஒரு சைலண்டான எதிர்ப்பு அலை வீசதான் செய்யும். என்னதான் நல்லது செய்தாலும் ஒரு எதிர்ப்பு அலைகள் ஓடிக்கொண்டே தான் இருக்கும். பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சி நடத்தினாலும் எங்களுக்கு ஐந்து சதவீதம் எதிர்ப்புகள் தான் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றறை ஆண்டுகளில் 95 சதவீத எதிர்ப்புகள் எழுந்துள்ளது. திமுக ஆட்சி மீது மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர். அரசு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கரூர் காரங்க பேரில்தான் ஓடுகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் எந்த திமுகவினர் பெயரிலும் பார் கிடையாது. தமிழக முழுவதிலும் இதே நிலைதான் உள்ளது. பாரை எடுத்து நடத்தும் திமுகவினர் கூட மாதம் மாதம் லஞ்சம் கொடுக்க வேண்டியது உள்ளது. சிஸ்டம் போட்டு திருடுவது உலகத்திலேயே திமுகவினர்கள்தான் முடியும். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஒரு மூடைக்கு 40 ரூபாய் லஞ்சம் கொடுக்கின்றனர். நியாயவிலைக் கடை ஊழியர்களை மிரட்டி திமுகவினர் பணம் பெறுகின்றனர். இது போன்ற செயல்கள் ஏழை எளிய மக்களை தான் பாதிக்கும். பத்து ஆண்டு காலம் உழைத்த திமுகவினருக்கு எதுவுமே கிடைக்கவில்லை. டாஸ்மாக் கடைகளில் டுப்ளிகேட் சரக்கு மட்டுமே கிடைக்கின்றது.

ஒரு அரசாங்கமே தப்பு செய்தால் நாம் யாரிடம் போய் கேட்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் சென்று பெட்டிஷன் கொடுக்கலாம். அந்த பெட்டிசனை சம்பந்தப்பட்டவர்களிடமே திருப்பி கொடுத்தால் எப்படி நம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போக முடியும். சத்தம் போடாமல் திருடுகின்ற வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. கையை உள்ள விட்டு கடலை மட்டும் திருடுகின்றனர். கடலை எடுக்கும் போது தான் வெறும்செடி வருகின்றது. ஆட்சியின் தவறுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இல்லை. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் ஆட்சி அதிகாரம் அவரது கண்ட்ரோலில் கிடையாது. முதல்வரை சுற்றி மிகப் பெரிய வட்டம் ஒரு அதிகார மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை மாற வேண்டும் என்று சொன்னால் ஒரு நல்ல அரசு வரவேண்டும். புரட்சிதலைவர் எம்ஜிஆர் அரசு, புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு, எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் வந்தால்தான் ஏழை எளிய மக்கள் நிம்மதியாக வழ முடியும். விலை வாசிகள் கட்டுப்படுத்த முடியும். செங்கல் விலை, சிமெண்ட் விலை, மோட்டார் விலை விவசாய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். ஏழைகளைப் பற்றி தெரிந்த ஒருவர், கஷ்டத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர்தான் முதலமைச்சராக வரவேண்டும். புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி போல ஏழைகளை நேசிக்கின்ற எடப்பாடியார் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வரவேண்டும். அதற்குரிய எப்போது தேர்தல் வந்தாலும் வாக்காளப் பெருமக்கள் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ். ஆர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, மாவட்ட ஊராட்சி சேர்மன் வசந்திமான்ராஜ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குறிஞ்சி முருகன், தலைமை கழக பேச்சாளர்கள் சங்கரன்கோவில் கணபதி, தீர்க்கனல் லட்சுமணன், சம்ஸ்க்கனி, ஜீவா, கணேசன், ராசப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, மாவட்ட இளைஞர் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் காமராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சேதுராமன், நகர கழக துணைச் செயலாளர்கள் கருமாரிமுருகன், கவிதா, மாவட்ட கவுன்சிலர்கள் கணேசன், மகாலட்சுமி, கருப்பசாமி, நகர மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை, நகர எம் ஜி ஆர் மன்ற செயலாளர் திருப்பதி, நகர அவைத் தலைவர் ராமராஜ், மாவட்ட பிரதிநிதி அங்குராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், துணைச் செயலாளர் கோட்டைமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், விஜய், கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன், இளைஞரணி நகரச் செயலாளர் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்.ஜ.ஓ காலனி மாரிமுத்து, மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேஷ்குமார், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் பொதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி பகுதி கழக செயலாளர் சரவணகுமார், கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி ஒன்றிய கழக துணைச் செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், வத்ராப் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், சுந்தரபாண்டியம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயகிரி, எஸ்.கொடிக்குளம் பேருராட்சி, வத்திராயிருப்பு பேரூராட்சி, சுந்தரபாண்டியன் பேரூராட்சி, செட்டியார்பட்டி பேரூராட்சி, வ.புதுப்பட்டி பேரூராட்சி, மம்சாபுரம் நிர்வாகிகள் சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய கழக நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *