
ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில்சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். . இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

