மதுரை விளாங்குடி பகுதியில் சேர்ந்தவர் ராஜேஷ் 60 நேற்று இரவு செல்லூர் பகுதியில் இருந்து விளாங்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த கன மழையின் காரணமாக தீக்கதிர் வைகை ஆற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி உயிரிழந்தார்.

வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர தேங்கியிருந்த மழை நீரில் மாட்டிக்கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழப்பு. உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக மது போதையில் வந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.






