இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்து திரும்ப பெருவதாக அறிவித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம்

மாணவர்கள நலன் கருதி பள்ளி உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.335 கோடியும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு பள்ளிகள் அருகில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.110 கொடியை ஒதுக்கியுள்ளதையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறேன்
அதேநேரத்தில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 110 விதியின் கீழ் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை திருத்தம் செய்து பழைய ஓய்வூதிட்டத்தை கொண்டுவருவோம் என்று அறிவித்தபடி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை ஓய்வுபெறும் நேரத்தில் திரும்ப வழங்கவேண்டும் அரசு செலுத்துகின்ற தொகையை ஓய்வூதியமாக வழங்கும் விதமாக திருத்தம் செய்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்ட காலமான 27 நாட்களும் ஈட்டிய விடுப்பாக ஏற்று ஊதிய பலன்களை வழங்க வேண்டும்
பகுதிநேர சிறப்பாசிரியர் 12 ஆயிரம் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்த 2200 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடத்தை பகுதி நேர ஆசிரியர்களை கொண்டே முழுவதுமாக நிரப்பப்பட்ட வேண்டும் , பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் வரை வாரத்தில் ஐந்து நாட்களும் பள்ளிக்கு வரவழைத்து தொகுப்பூதியமாக மாதம் ரூ ,25.000/- வழங்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலன் மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு




