• Thu. Apr 25th, 2024

இந்தியாவிற்கு வருகை தர புதிய தென்கொரியா அதிபருக்கு அழைப்பு…

Byகாயத்ரி

Mar 19, 2022

தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் யூன் சுக்-யோல் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படார் . அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததோடு இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யோலுக்கு வெற்றிக்கான வாழ்த்தை தெரிவித்தும் பல்வேறு துறைகளில் இந்தியா – தென்கொரியா இடையேயான சிறப்பு ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்’ என தெரிவித்துள்ளார். அதோடு, இந்தியா – தென்கொரியா இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்ட 50-வது ஆண்டிற்கான ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கான விருப்பத்தை இரு தலைவர்களும் வெளியிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு விரைவில் வருமாறு தென்கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பும் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *