• Fri. Apr 19th, 2024

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புதிய பதவி

ByA.Tamilselvan

Sep 9, 2022

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்பண்டாரி வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரி கடத்தல், மற்றும் அந்நியச்செலவாணி மோசடி சட்டதீர்ப்பாய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 12ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து முனிஸ்வர் நாத் பண்டாரி ஓய்வுபெற உள்ளார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவியேற்கும் நாளிலிருந்து நான்காண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *