• Thu. Jun 1st, 2023

இந்தியாவில் 1000 தாண்டிய ஒமிக்ரான் பாதிப்பு

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


அதிகபட்சமாக, டெல்லியில் 450 பேர்,மகாராஷ்டிராவில் 320 பேர்,கேரளாவில் 109 பேர்,குஜராத் 97 பேர் ,தமிழகத்தில் 46 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்,ஒமிக்ரான் தொற்றிலிருந்து 374 பேர் குணமடைந்து விட்டதாகவும், 896 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *