சென்னையில் 403 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறைந்த விலையில் உணவுகள் இங்கு விற்பனை செய்யப்படுவதால் ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்கள் இதனை நம்பி உள்ளனர். ஒரு வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் வீதம் 200 வார்டுகளில் இயங்குகின்றன. இது தவிர அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் உதவியாளர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பின் போது அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட்டன. கொரோனா முதல் அலை தாக்கத்தின்போது இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன.பொது முடக்கத்தின் போது அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள் விளங்கின. தினமும் 4 லட்சம் பேர் உணவருந்தினார்கள். 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டதால் தெருவோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், கூலி தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.
2-வது அலையின் போது கடந்த ஆண்டும் அம்மா உணவகங்கள் கை கொடுத்தன. இலவசமாக சில நாட்கள் உணவுகள் வழங்கப்பட்டன.இந்த நிலையில் தற்போது 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
அன்றைய தினம் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. அதே நேரத்தில் பார்சல் வினியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அம்மா உணவகங்கள் அனைத்தும் அன்று முழு அளவில் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாலையோரங்களில் இயங்கும் சிறிய தள்ளுவண்டி கடைகள் மூடப்படுவதால் சாமான்ய மக்கள் பாதிக்கப்படாத வகையில் அம்மா உணவகங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அம்மா உணவங்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட அன்று கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் உணவு தட்டுப்பாடு வராமல் தேவையான அளவு உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி ஆகியவை தயாரிக்க உணவு பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 1.75 லட்சம் பேர் சாப்பிட்டு வருகிறார்கள். ஊரடங்கின் போது இந்த எண்ணிக்கை மேலும் 2 லட்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]
- உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணிஉலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் […]
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]