திண்டுக்கல் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பிடித்தவர்கள் அடித்துக் கொன்றனர்.

திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்திற்குள் புகுந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்து இருக்க வேண்டும்.
ஆனால் பாம்பினை பிடிப்பதாக கூறி அதனைக் அடித்து கொன்று புகைப்படமும் எடுத்து வீரதீர செயல் போன்று அதனை குழுவில் பதிவிட்டு இருப்பது மிகவும் வேதனைக்குரிய செயலாக கருதப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்புத்துறை, வனத்துறை நடவடிக்கை தேவை என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



