கம்பீர குரல் வளத்திற்கு சொந்தக்காரர் மட்டுமின்றி பாட்டு மற்றும் நடிப்பிலும் தனக்கென தனி முத்திரையை பதித்த பெருமை, எம்.கே.தியாகராஜ பாகவதரையே சாரும். இவரது 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதிலுமுள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முடி சூடா மன்னராக திகழ்ந்தவர், எம்.கே.தியாகராஜ பாகவதர். இவர் ரசிகர்களால் எம்.கே.டி.என செல்லமாக அழைக்கப்பட்டார். கம்பீர குரல் வளத்தில் மட்டுமின்றி அபார நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். பவளக்கொடி, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக் குமார், அமரகவி உள்ளிட்ட 14 படங்களில் மட்டுமே நடித்து புகழ் பெற்ற பெருமை எம்.கே.தியாகராஜ பாகவதரையே சாரும். மேலும் இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ என்ற படம் மட்டும் மூன்று தீபாவளியை தாண்டி ஓடி வசூல் சாதனை படைத்ததை, அவரது ரசிகர்கள் இன்றளவும் மறந்திருக்க முடியாது. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருந்தனர். அவர் அணியும் பட்டு ஜிப்பா, அவருக்கே உரித்தான சிகை அலங்காரம் ஆண்களை மட்டுமின்றி பெண்களையும் வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக அந்தக் காலத்தில் வாழ்ந்த பல இளைஞர்கள் ‘பாகவதர் ஸ்டைலில்’ முடி வைத்திருந்தனர். இவர் செல்லும் இடங்களில் எம்.கே.டி.யை ஒரு முறையாவது எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் அந்த இடத்திற்கு முன்கூட்டியே பொதுமக்கள் சென்று நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்த காலமும் உண்டு. இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற, எம்.கே.தியாகராஜ பாகவதரின் 113வது பிறந்தாள் விழா, இன்று (மார்ச் 1) உலகம் முழுவதிலுமுள்ள அவரது ரசிகர்களால் கொண்டப்பட்டன. இதில் முத்தாய்பாக திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் அமைந்துள்ள எம்.கே.டி., யின் நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் விஸ்வகர்மா மகாஜன சபை நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் விஸ்வகர்மா மகாஜன சபை தலைவர் குமரப்பன் ஆச்சாரி, செயலாளர் சுப்பன்னா ஆச்சாரி, பொருளாளர் வெள்ளையன் ஆச்சாரி, துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் கந்தசாமி, மருதமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]