காக்கா முட்டை மணிகண்டன் தயாரித்து இயக்கியுள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் கடந்த வெள்ளி அன்று வெளியானதுஇந்தப் படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது காரை ஓட்டிக் கொண்டே இந்தக் ‘கடைசி விவசாயி’ படத்தைப் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதில் மிஷ்கின் பேசும்போது, இந்தப் படத்தைப் பற்றி பேச வேண்டும். எப்படி பேசுவது என்று யோசித்தேன். என் மகளுக்கு ஒரு கடிதம் எழுதி அதனை பத்திரிகைகளுக்கு கொடுக்கலாமா என்றுகூட யோசித்தேன். எனக்கு வாழ்க்கையை சொல்லித் தந்த படமாக இதனைப் பார்க்கிறேன்.
மிஷ்கின் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேசுவார் என்று சொல்வார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். நான் என் மனதில் இருந்து பேசுகிறேன். என் மகளிடம் இந்தப் படத்தைப் பார்க்க சொல்வேன்.படம் மெதுவாக நகர்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் மெதுவாக நாம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொல்கிற படம் இது.
நான் இப்பொழுது காரில் பயணிக்கிறேன். ஆனால் 20 செண்ட்கூட நிலமில்லாத குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். என் தந்தையார் விவசாயம் செய்தவர் இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
என் மகள் தற்போது கனடாவில் படிக்கிறாள். எனக்கு மிகப் பெரிய வருத்தம். அவள் கனடாவிலேயே இருக்கப் போகிறாளா என்று தெரியவில்லை. ஆனால் என் மகளிடம் எங்கே உன் வாழ்நாளை செலவிடப் போகிறாய் என்பதை மறுபரிசீலனை செய் என்று சொல்வேன்.இது மிகவும் வலிமையான படம். தன் ஆன்மாவை சுத்தப்படுத்த வேண்டும் என மணிகண்டன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். கடந்த நூறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம்.
தயவு செய்து அனைவரும் இந்தப் படத்தை பாருங்கள். கடந்த 20 வருடங்களில் நாம் எவ்வளவு பொறுக்கித்தனமான படங்களை பார்த்திருப்போம்…? எவ்வளவு மோசமான படங்களை நாம் கொண்டாடி தீர்த்திருக்கிறோம்…?
இந்தப் படத்தை ஒரு முஸ்லிம் கொண்டாட வேண்டும். ஒரு கிறிஸ்தவன் கொண்டாட வேண்டும். இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்த என் தம்பி விஜய் சேதுபதியை நான் கட்டித் தழுவி முத்தம் கொடுக்க வேண்டும். அவன் படத்தில் ஒரு சாமியாகவே வந்துவிட்டு போய்விட்டான். காற்றோடு காற்றாக கலந்துவிட்ட அந்த காட்சி இந்தியாவில்எடுக்கப்படவேயில்லை.படத்தில் இசையைக் கையாண்ட விதமும் சிறப்பாக இருந்தது. இளையராஜா இல்லையே என்ற ஒரு சந்தேகத்துடன் சென்றேன். இளையராஜாவால்கூட இந்தப் படத்துக்கு உதவி செய்ய முடியாது. எவ்வளவு பெரிய இசையமைப்பாளராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் எல்லா தொழில் நுட்ப அம்சங்களையும் தாண்டி இந்தப் படம் மிகப் பெரிய உயர்வுக்கு சென்று விட்டது.
இந்தப் படம் மகா உன்னதமான படம். ஒரு தவறு கூட இந்தப் படத்தில் இல்லை என்று சொல்வேன். இந்தப் படத்தில் பணி புரிந்தவர்களின் கால்களுக்கு நான் முத்தமிடுவேன்…” என்று பேசியுள்ளார்.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]