தமிழகத்தில் கன்னியாகுமரி உட்பட அனைத்து சுற்றுலா மையங்களிலும்
முகக்கவசம் கட்டாயம் என்று சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் பெரும் திரளாக குவிந்து வருகின்றனர்.
கன்னியாகுமரிக்கு கடந்த ஐந்து நாட்களில் மட்டுமே 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகில் பயணித்து. கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துள்ளார்கள் என படகு துறை அதிகாரி தெரிவித்தார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பொது இடங்களில் நடமாடவேண்டும்.முக கவசம் அணியாமல் வரும் அனைவருக்கும் முக கவசம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன். அனைத்து சுற்றுலா தலங்களிலும் கிருமி நாசினிகள் வைக்கவும், கை கழுவவும் அறிவுறுத்தப்படும் என்று
தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால். மீண்டும் புதிய வகை கொரோனாவால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என மருத்துவத்துறை அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் இது குறித்து கூடுதல் அறிக்கையாக. தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என்பது வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகில் பயணப்பட நீண்ட வரிசையில் காலை முதலே காத்து நிற்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளில் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்கின்றனர். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லையென்றால் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாக சூழ்நிலை உருவாகும் என்றார்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]