சோழவந்தான் அருகே 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சோழவந்தான் அருகே தென்கரையில் 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம் விவசாய அணி சார்பாக, சோழவந்தான் அருகே தென்கரையில் 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன் வரவேற்புரையாற்றினார். சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் முன்னாள் திருமங்கலம் எம்எல்ஏ முத்துராமலிங்கம், விவசாய அணி துணைச் செயலாளர் கணேசன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நேரு பாண்டியன், வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி காந்தன் கிருஷ்ணவேணி, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர்கள் எஸ் எஸ் கே ஜெயராமன், பால்பாண்டியன், ரேணுகா, ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர்கள் லதா கண்ணன், வாடிப்பட்டி வக்கீல் கார்த்திக், சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், அலங்காநல்லூர் ரகுபதி, ஆனையூர் பகுதிச்செயலாளர் மருதுபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சி.பி.ஆர் சரவணன், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, இளைஞரணி வெற்றிச்செல்வன், அன்புச்செல்வன், ஐயப்பன், மணிவேல், மாணவரணி எஸ்.ஆர்.சரவணன், மகளிர் அணி சந்தான லட்சுமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகா வீரபாண்டி, சுப்பிரமணி, தொமுச நிர்வாகிகள் அமிர்தராஜ், பாலசுப்பிரமணியன், பாலமுருகன், ஹபீப் முகமது, மேலக்கால் ராஜா, சங்கங்கோட்டை சந்திரன், ரவி, சமரன், ஊத்துக்குளி ராமலிங்கம், விக்னேஷ் , தென்கரைக் கண்மாய் பாசன விவசாய சங்க பிரதிநிதிகளான மாவட்ட பிரதிநிதி ராஜாமன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் கேபிள் ராஜா நன்றி கூறினர்.




