பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூபாய் 3000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம் பெறுவோர், தினக்கூலி என அனைவருக்கும் ரூ.3000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் பணியாளர்கள் 2022 – 2023 நிதியாண்டில் 240 நாட்கள் பணி செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.