மதுரை செல்லூர் பகுதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வியாபாரிகளுக்கு பொது கழிப்பிட வசதி வேண்டியும், சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு, கொரானா காலத்திலும் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் வங்கிகளுக்கு எதிராக கண்டனம்
உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும்,தமிழக முதல்வர் பனைமரங்களைவெட்டுவதற்கு தடை விதித்துள்ளதற்கும் வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்.