“டைட்டிலைப் பார்த்ததும் ஏதோ நமது பழைய நினைவுகளை கிளறி விடும் படம் என நினைத்தால்…அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்குகிற படம்
இது பக்கா மனோதத்துவதிரில்லர். ஒரு மனிதனுக்குள் இருக்கும் நினைவுகளை அறிவியல் துணையுடன் மருத்துவர்மூலமாக அழித்து, வேறு பல புதிய நினைவுகளை சிந்திக்கும் சிறுமூளைக்குள்வைக்க முடியும் என்ற அதிர்ச்சி ஒருவரி கதையைமையக்கருவாக கொண்ட திரைப்படம் மெமெரிஸ்

கதை?
ஒரு டிவி சோ மூலமாக ஒருவனது வாழ்க்கையை நாயகன் வெற்றி சொல்கிறார். அந்தக் கதையில் வருபவரும் வெற்றி. அந்தக் கதையில் வெற்றி நான்கு கொலைகளை செய்கிறார். அவர் செய்த கொலைகளுக்கான காரணம் என்ன? உண்மையில் அந்தக் கொலைகளை அவர் தான் செய்தாரா? இல்லை அறிவியல் நிறைந்த மருத்துவம் அவர் நினைவில் அந்தக் கொலைகளை அவர் செய்ததாக புகுத்தி விட்டதா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் முயற்சிதான் மீதிப்படம்
அபிநவ் ராமானுஜம் கெட்டப்பில் வெற்றி நடிப்பு நன்றாக எடுபட்டுள்ளது. ஹரிஸ் பேரடி தனது நடிப்பை வஞ்சகம் செய்யாமல் வழங்கியிருக்கிறார் அ நாயகிக்கு வந்துபோவதை தவிரபெரிய வேலை எதுவும் படத்தில் இல்லை.
திரில்லர் படங்கள் என்றால் இசை மூலம் தான் படத்தின் காட்சிகளை அதன் அதிர்வுத்தன்மையோடு கடத்த முடியும். அதை உணர்ந்து இசை அமைத்துள்ளார் கவாஸ்கர் அவினாஸ். படத்தின் ஒளிப்பதிவில் நல்ல சிரத்தை எடுத்து லைட்டிங் அமைத்துள்ளார் கேமராமேன்.
மனித நினைவுகளை மாற்றி வைத்து அதன்மூலம் மிகப்பெரிய குற்றச்செயல்கள் செய்ய முடியும் என யோசித்து ஒரு லைனைப் பிடித்த இயக்குநர்கள் ப்ரவீன் ஷ்யாம். நம் இந்தியச் சினிமா ரசிகனின் உளநிலை அறிந்து எமோஷனல் கனெக்டிங்கோடு திரைக்கதை அமைத்திருந்தால் நம் மெமெரிஸில் அழிக்க முடியாத படமாக இது அமைந்திருக்கும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படத்தைப் புரிஞ்சிக்கணுமா என்ற அளவில் சற்றுத் திணற வைக்கும் திரைக்கதை தான் படத்திற்கு வில்லன். ஆனாலும் இந்த வித்தியாசமான முயற்சிக்காக படத்தை ஒருமுறை சினிமா ரசிகன்சிரத்தை எடுத்தேனும் பார்க்கலாம்”
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]