“உணவு தான் கனவு என்று வாழும் நிலையில் உள்ளவர்களுக்கு எந்த வகையிலாவது உதவிக்கரம் நீட்ட வேண்டும். அதற்குப் பின்னால் எவ்வளவு சதிகள், சூழ்ச்சிகள், அரசியல் இருந்தாலும் அதனை தவிடு பொடியாக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவன் அகிலன். பசி என்பது உலகம் முழுமையும் உள்ள மக்களுக்குபொதுவானது. அதைத் தீர்க்க நாடு கடந்து மனிதர்கள் ஒன்றிணைந்தால் உலகமே ஒரு குடையின் கீழ் ஒன்றிணையும். அப்படி ஒன்றிணைந்தால் மக்களின் பசியை வைத்துப் வணிகம் செய்யும் பெருமுதலாளிகளுக்குவருமானம், அதிகாரம் ஆகியவை தடைபடும் என்ற சர்வதேசஅரசியலைசமூக நோக்கோடு அணுகியிருக்கிறது அகிலன் படம்
துறைமுகத்தில்ஆல் இன் ஆளாக வலம் வருகிறார் ஜெயம்ரவி. தான் யாரிடம் வேலை செய்கிறோமோ அவரையே விஞ்சி பெரு வில்லன் கபீரிடம் இணைகிறார். பெரும் வினைகளை துணைகளாக்கி கொண்டு ஜெயம் ரவி பயணிப்பது எதற்காக? என்பதற்கு பதில் சொல்கிறது படத்தின் திரைக்கதை கப்பல் துறைமுகத்தில் நிறைய நடிகர்கள் வலம் வந்தாலும் ஒற்றை ஆளுமையாக ஈர்க்கிறார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வனுக்கும் கடலுக்கும் தொடர்பு உண்டு என்பதாலோ என்னவோ, கடல் காட்சிகளில் எல்லாம் ஜெயம் ரவியை அப்படி ரசிக்க முடிகிறது. நாயகிகள் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் இருவருக்கும் சிறுவேடம் தான்.
ஹரிஸ் பேரடி, சாய் தீனா, கபீர் கேரக்டரில் வருபவர், முரளியாக வரும் போலீஸ் கேரக்டர் என சகலரும் சளைக்காது நடிப்பில் அசத்தியுள்ளனர். இவர்களில் தனித்துத் தெரியும் கேரக்டரால் கவனிக்க வைக்கிறார் மதுசூதனராவ்.சாம்.சி எஸ் வலிந்து திணித்துள்ள சில இன்ஸ்ட்ரூமெண்ட்களின் சவுண்ட்களை தவிர்த்து மொத்தப்படத்திற்கும் சிறப்பாகவே இசை அமைத்துள்ளார். பாடல்களுக்கு பெரிதாக வேலையில்லை என்பதால் அதைத் தனித்துச் சொல்லவேண்டியதில்லை. ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோசம் மிக அழகானதொரு விஷுவலைக் கொடுத்துள்ளார். துறைமுகத்தின் பிரம்மாண்ட காட்சிகள் எல்லாம் அவ்வளவு கலைநேர்த்தியோடு படம் பிடிக்கப்பட்டுள்ளது.தயாரிப்பாளர்கள் இப்படத்திற்கு தாரளமாக செலவு செய்துள்ளார்கள்.
மிகத்தேவையான சமூகக்கதை. அதை இப்படியான ஒரு மினிமம் கியாரண்டி ஹீரோவை வைத்துச் சொல்வது தான் சரி என முடிவெடுத்துள்ள இயக்குநர் கல்யாண் கிருஷ்ணனின் புத்திசாலித்தனத்திற்கு பாராட்டுக்கள். தொய்வற்ற முதல்பாதியும், கனமான செய்திகள் நிறைந்த இரண்டாம் பாதியும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளன. பொதுவாக உலகம் முழுவதும் வறுமையை வாழ்க்கையாக கொண்டவர்களை இணைக்கும்கதை என்பதால் அகிலனுக்கு ஆதரவு அளிப்பது எல்லோரதுகடமை
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]